search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    கீழ்வேளூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதியில் கஞ்சா விறபனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கீழ்வேளூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு வெளி நீர்த்தேக்க தொட்டி அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கீழ்வேளூர் வடக்குவெளி நேரு நகர் பாலு மகன் கோகுல்ராஜ்(வயது 24) என்று தெரிய வந்தது. அவர் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதன் உள்ளே 500 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜை கைது செய்ததுடன் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×