search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மூலைக்கரைப்பட்டியில் டிரைவர் தற்கொலை

    மூலைக்கரைப்பட்டியில் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இட்டமொழி:

    மூலைக்கரைப்பட்டி தியாகராஜர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கியப்பன் (வயது 37). டிராக்டர் டிரைவர். இவருக்கு அதே ஊரில் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இசக்கியப்பன் திருமணத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் மும்பையில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலையில் இசக்கியப்பன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கியப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×