search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    தூத்துக்குடியில் 12 இடங்களில் அபாயகரமான உலோகங்கள்- கனிமொழி

    தூத்துக்குடியில் அபாயகரமான உலோகங்கள் இருக்கும் பகுதிகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கூறி உள்ளார்.
    சென்னை:

    கனிமொழி எம்.பி. கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனைகளில் 12 இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழக அரசு, இப்பகுதிகளை சீர்செய்ய, வல்லுனர்களோடு ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×