என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்கு முககவசம் அணிவிக்கப்பட்டு விழிப்புணர்வு
Byமாலை மலர்10 Nov 2020 8:50 AM GMT (Updated: 10 Nov 2020 8:50 AM GMT)
தஞ்சாவூரில் தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தலையாட்டி பொம்மைகளுக்கு முக்கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் தடுப்பூசி ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தான் கொரோனா பரவாமலும், வராமலும் தடுக்க முடியும்.
இந்நிலையில் தஞ்சாவூரில் தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான தலையாட்டி பொம்மைகளுக்கு முக்கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்களில் யாரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தலையாட்டி பொம்மையை பார்த்து அருகே உள்ள கடைகளில் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X