என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்? - ஸ்டாலின் கேள்வி
Byமாலை மலர்9 Nov 2020 2:06 PM GMT
தமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும் என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
மதுரை மேலூரில் திமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்? என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மக்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு எய்ம்ஸே உதாரணம் என சாடினார்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமைக்க படம் எடுத்தார்களே தவிர இன்னும் கட்டுமானப் பணியை தொடங்கவில்லை எனக்கூறிய ஸ்டாலின், வருமானவரித்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு, உள்துறை என்ன செய்து வருகிறது? என வினவினார். மதுரையில் பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக தான்.
சிட்னி, ரோம் நகர் போன்று மதுரையை செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் மாற்ற வேண்டாம், அதனை மேலும் கெடுக்காமல் இருந்தால் போதும் என ஸ்டாலின் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X