என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்9 Nov 2020 9:38 AM GMT (Updated: 9 Nov 2020 9:38 AM GMT)
தீபாவளியையொட்டி திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி:
தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் திருச்சியில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி திருச்சி வில்லியம்ஸ் சாலையில் சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், மன்னார்புரம் பகுதியில் மதுரை சாலை மற்றும் கல்லுக்குழி இலுப்பூர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த 3 இடங்களிலும் தகரத்தினால் ஆன கொட்டகை அமைத்து அரசு பஸ்களின் நேர காப்பாளர்கள் அவரும் பகுதிகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. சோனா மீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், கல்லுக்குழி இலுப்பூர் சாலையில் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம் மார்க்கமாக செல்லும் பஸ்களும், மன்னார்புரம் மதுரை சாலையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்குவதற்காகவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் இரண்டொரு நாளில் முடிவடையும். அதன் பின்னர் இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்‘ என்றார்.
தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் திருச்சியில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி திருச்சி வில்லியம்ஸ் சாலையில் சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், மன்னார்புரம் பகுதியில் மதுரை சாலை மற்றும் கல்லுக்குழி இலுப்பூர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த 3 இடங்களிலும் தகரத்தினால் ஆன கொட்டகை அமைத்து அரசு பஸ்களின் நேர காப்பாளர்கள் அவரும் பகுதிகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. சோனா மீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், கல்லுக்குழி இலுப்பூர் சாலையில் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம் மார்க்கமாக செல்லும் பஸ்களும், மன்னார்புரம் மதுரை சாலையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்குவதற்காகவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் இரண்டொரு நாளில் முடிவடையும். அதன் பின்னர் இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்‘ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X