search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாலியமங்கலம் அருகே கஞ்சா விற்றவர் கைது

    சாலியமங்கலம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
    சாலியமங்கலம்:

    தஞ்சை அருகே உள்ள ராராமுத்திரக்கோட்டை புதிய ஆற்றுப்பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுரேஷ் (வயது33) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×