என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு, பட்டாசுகளுக்கு தடை, விடுதிகளை திறக்க விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய செய்திகள்
Byமாலை மலர்9 Nov 2020 7:39 AM GMT (Updated: 9 Nov 2020 7:39 AM GMT)
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு, பட்டாசுகளுக்கு தடை, விடுதிகளை திறப்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
# காற்று மாசு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில், இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
# பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 79.17 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
# தமிழகத்தில் வருகிற 16ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு நேரடியாக வர முடியாதவர்கள் தபால் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
# தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று தொடங்கியது.
# கல்லூரிகள் திறப்பு பற்றி 12ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
# எதிர்க்கட்சிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதாக எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
# புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மறுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக கவர்னர் சதி செய்துள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
# அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜோ பைடன் தகுதி பெற்றுள்ளபோதிலும், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். இந்த பிரச்சனைக்கு மத்தியில், வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார்.
# மியான்மர் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலையில் உள்ளது.
# கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நாளை திறக்க இருப்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
# தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X