search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அவினாசி, ஊத்துக்குளியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    அவினாசி, ஊத்துக்குளியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    அவினாசியை அடுத்த பெரியாயிபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு ஜாக்சன் இவரது மகன் அகில் (20), இவர் ஜீவா நகர் பகுதியில் 100 கிராம் கஞ்சா விற்க வைத்திருந்ததாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது போல் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கப்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் அருகே மறைவான இடத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலாம் சிங் (வயது 45) என்பவரை கைது செய்த ஊத்துக்குளி போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×