என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
Byமாலை மலர்9 Nov 2020 3:57 AM GMT (Updated: 9 Nov 2020 3:57 AM GMT)
திற்பரப்பு அருவியில் தற்போது சாரல் மழையுடன் ‘குளு... குளு... சீசன்’ நிலவுவதையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெறுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, படகு போக்குவரத்து போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அருவியின் அருகே சிவராத்திரி ஓட்டத்தின் 3-வது சிவாலயமான மகாதேவர் கோவில் உள்ளது.
திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் நீச்சல் குளத்தில் குளிப்பதோடு படகு தளத்தில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். மேலும், அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அத்துடன் அந்த பகுதியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால் ‘குளு... குளு...’ சீசன் நிலவுகிறது.
விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக திற்பரப்புக்கு வந்தனர். அவர்கள் அருவிக்கு சென்று குளிக்க முற்பட்டனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் தொலைவில் நின்று அருவியின் அழகையும், பாறைகளின் இடையே தண்ணீர் பாய்ந்து செல்வதையும் பார்த்து ரசித்துவிட்டு திரும்பினர். சிலர் அருகில் இருந்த மகாதேவர் கோவிலில் சாமி கும்பிட சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X