என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி
Byமாலை மலர்8 Nov 2020 11:26 AM GMT (Updated: 8 Nov 2020 11:26 AM GMT)
பனப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் உளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு விற்பனையான தொகை ரூ.3 லட்சத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் கிளம்பினார். சுமார் 100 மீட்டர் கடந்து சென்றபோது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் கையிலிருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் ஞானவேல் இதுகுறித்து நெமிலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X