search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    தடையை மீறி இரண்டாவது நாள் வேல் யாத்திரை -எல்.முருகன் மீண்டும் கைது

    சென்னையில் தடையை மீறி இரண்டாவது நாள் வேல் யாத்திரையை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை: 

    தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. எனவே, வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

    ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன்அறிவித்திருந்தார்.அதன்படி இரண்டாவது நாள் யாத்திரையை இன்று சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. அப்போது போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். யாத்திரையில் பங்கேற்ற எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக தொண்டர்களிடையே பேசிய எல்.முருகன், எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி அடையும் என்றும், அனைத்து ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று யாத்திரை நிறைவடையும் என்றும் கூறினார்.

    மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கப்போகிறது என்றும், அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் என்றும் எல்.முருகன் கூறினார்.
    Next Story
    ×