என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்துக்கொலை
Byமாலை மலர்8 Nov 2020 8:27 AM GMT (Updated: 8 Nov 2020 8:27 AM GMT)
திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் என்ற பழனிச்சாமி (வயது 68) இவர் சிறுபூலுவப்பட்டி தபால் நிலையம் பின்புறம் உள்ள தண்டபாணி என்பவருக்கு சொந்தமான பண்ணையில் கடந்த 1½ ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். தண்டபாணிக்கும் அவருடைய உறவினரான சாமுண்டிபுரம் சிவசக்தி நகரை சேர்ந்த ராமசாமி (60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ராமசாமி அடிக்கடி தண்டபாணி பண்ணைக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு ராமசாமி தண்டபாணிக்கு சொந்தமான பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பழனிச்சாமியிடம் தண்டபாணி குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உரிமையாளரான தண்டபாணிக்கு ஆதரவாக பழனிச்சாமி பேசியுள்ளார். இதையடுத்து ராமசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் பழனிச்சாமி மீது அவருக்கு இருந்த ஆத்திரம் தீரவில்லை. இதனால் மறுநாள் காலை மீண்டும் பண்ணைக்கு சென்ற ராமசாமி அங்கிருந்த பழனிச்சாமியை அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரது தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனிச்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ராமசாமியை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X