search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    13 மாவட்ட மீனவர்களுக்கு ரூ.65 கோடி நிவாரணம்- அமைச்சர் தகவல்

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும். இந்த பணம் தீபாவளியையொட்டி மீனவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் சென்னையை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×