search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி கெப்சி ஹோனா
    X
    சிறுமி கெப்சி ஹோனா

    தென்னை மரத்தில் ஏறி அசத்தும் 7 வயது சிறுமி

    கொரோனா ஊரடங்கு காரணமாக தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் கால்களிலேயே மரங்களில் ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.
    விக்கிரமசிங்கபுரம்:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை மணிநகரத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின். இவருடைய மனைவி ரேணுகா. இவர்களுக்கு தாம்சன் ஆல்வின் (10) என்ற மகனும், கெப்சி ஹோனா (7) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 5, 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இவர்களது வீட்டில் தென்னை மரங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்த சிறுமி கெப்சி ஹோனா தென்னை மரங்களில் ஏறுவதற்கு முயன்றார். இதனைப் பார்த்த உறவினர், சிறுமிக்கு தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி அளித்தார். இதில் நன்கு பயிற்சி பெற்ற சிறுமி கெப்சி ஹோனா ஆர்வமுடன் தென்னை மரங்களில் வெறும் கால்களிலேயே விறுவிறுவென ஏறி இளநீர், தேங்காய்களை பறித்து அசத்துகிறார்.
    Next Story
    ×