search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி பலி

    கிணத்துக்கடவு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள அண்ணா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 55). விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கிய அவர், காலில் காயம் அடைந்து சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அதன்பிறகு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சுப்பிரமணியம் கடந்த 4-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×