search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

    மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400 மற்றும் 52 சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    மோகனூர்:

    மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் புக்கராண்டி கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஒருவந்தூர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 42), பிரபு (38), மகேந்திரன் (29), திருச்சி மாவட்ட உன்னியூரை சேர்ந்த கர்ணன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000, 52 சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஒருவந்தூர் குட்டுகாடு பகுதியில் போலீசார் சென்றபோது அங்கு ஒருவந்தூரை சேர்ந்த யோகராஜ் (27), ஜெகன் (25) சந்திரசேகர் (40) தனசேகரன் (40), குமார் ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2,400 மற்றும் 52 சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×