search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குன்னத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

    குன்னத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
    குன்னத்தூர்:

    ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியைச்சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 65). இவர் நல்லாம்பட்டியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தார். முன்னதாக தனது மொபட்டை பெருமாநல்லூரில் நிறுத்தி விட்டு சென்றிருந்தார். சென்னையில் இருந்து பெருமாநல்லூருக்கு நேற்று அதிகாலை வந்து இறங்கி தனது மொபட்டை எடுத்துக்கொண்டு நல்லாம்பட்டி சென்றுகொண்டிருந்தார். 

    குன்னத்தூர் அருகே பாப்பாவலசு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் இவரது மொபட்டில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

    குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னியப்பன் உடலை அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×