என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்கொடை கேட்டு மிரட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Nov 2020 6:50 AM GMT (Updated: 7 Nov 2020 6:50 AM GMT)
சங்கரன்கோவில் அருகே நன்கொடை கேட்டு மிரட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 30). இவர் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரன்கோவில் புதுமனை தெரு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட விவசாய அணி நிர்வாகி பால்சாமி மற்றும் தாலுகா நிர்வாகி அசோக்ராஜ் ஆகியோர் கட்சி நன்கொடையாக ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மாரிச்செல்வம் ஏற்கனவே நகராட்சி குத்தகை பணம் கட்டிதான் தான் வியாபாரம் செய்து வருவதாகவும், தற்போது வியாபாரம் சரியில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அவரை அவதூறாக பேசி மிரட்டி ரூ.200 வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கட்சி நிர்வாகிகள் இருவர் மீதும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X