என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Nov 2020 6:02 AM GMT (Updated: 7 Nov 2020 6:02 AM GMT)
திருவாரூரில் 30 சதவீத போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
கொரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடியாக 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையாக மாற்ற வேண்டும். பணியில் இருந்த போது உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அமைப்பின் தொ.மு.ச. மாநில பிரசார செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் லெனின், அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பி.டி.லெனின், தொ.மு.ச. மாவட்ட தலைவர் தமிழரசன், எல்.எல்.பி. மாவட்ட செயலாளர் சார்லஸ், சி.ஐ.டி.யூ. அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கொரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடியாக 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையாக மாற்ற வேண்டும். பணியில் இருந்த போது உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அமைப்பின் தொ.மு.ச. மாநில பிரசார செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் லெனின், அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பி.டி.லெனின், தொ.மு.ச. மாவட்ட தலைவர் தமிழரசன், எல்.எல்.பி. மாவட்ட செயலாளர் சார்லஸ், சி.ஐ.டி.யூ. அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X