என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் 119 கிலோ புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்7 Nov 2020 3:29 AM GMT (Updated: 7 Nov 2020 3:29 AM GMT)
திருமங்கலத்தில் 119 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள முகமதுஷாபுரத்தைச் சேர்ந்தவர் அமானுல்லா (வயது 50). இவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் முகமதுஷாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமானுல்லா அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விமல் (35) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விமல் மற்றும் அமானுல்லாவை கைது செய்து அவர்களிடம் 2 மூடைகளில் இருந்த 119 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள முகமதுஷாபுரத்தைச் சேர்ந்தவர் அமானுல்லா (வயது 50). இவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் முகமதுஷாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமானுல்லா அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விமல் (35) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விமல் மற்றும் அமானுல்லாவை கைது செய்து அவர்களிடம் 2 மூடைகளில் இருந்த 119 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X