என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்து வரி அபராதம் 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைப்பு
Byமாலை மலர்7 Nov 2020 2:48 AM GMT (Updated: 7 Nov 2020 2:48 AM GMT)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி அபராத தொகை 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும் வரி செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நிகர சொத்து வரியுடன் (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) கூடுதலாக ஆண்டுக்கு 2 சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் அபராதத்தொகை விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பொது ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேலை மற்றும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு 2-வது அரையாண்டு காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஏற்கனவே 2 சதவீதம் அபராதம் செலுத்தியவர்களுக்கு 0.5 சதவீதம் அபராதம் கணக்கிட்டு மீதமுள்ள தொகை அடுத்த அரையாண்டுக்கு ஈடுகட்டப்படும். அடுத்து வரும் நிதி ஆண்டின் முதல் அரையாண்டின் அதாவது ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தப்படாதவர்களுக்கு ஆண்டுக்கு 2 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும்.
2020-21-ம் நிதி ஆண்டில் முதல் அரையாண்டு மற்றும் 2-வது அரையாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி அக்டோபர் 31-ந் தேதி வரை ரூ.249.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும் வரி செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நிகர சொத்து வரியுடன் (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) கூடுதலாக ஆண்டுக்கு 2 சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் அபராதத்தொகை விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பொது ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேலை மற்றும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு 2-வது அரையாண்டு காலமான கடந்த அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை 2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஏற்கனவே 2 சதவீதம் அபராதம் செலுத்தியவர்களுக்கு 0.5 சதவீதம் அபராதம் கணக்கிட்டு மீதமுள்ள தொகை அடுத்த அரையாண்டுக்கு ஈடுகட்டப்படும். அடுத்து வரும் நிதி ஆண்டின் முதல் அரையாண்டின் அதாவது ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தப்படாதவர்களுக்கு ஆண்டுக்கு 2 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும்.
2020-21-ம் நிதி ஆண்டில் முதல் அரையாண்டு மற்றும் 2-வது அரையாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி அக்டோபர் 31-ந் தேதி வரை ரூ.249.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X