search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும் ஒளி, உதயசூரியனால் கிடைக்கும்- மு.க. ஸ்டாலின்

    அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப்பாதையில் வளர்த்தெடுப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்து, நிர்வாகத்தைச் சீரழித்து, தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை இல்லா திண்டாட்டத்தை பெருக்கி, மாநில அரசுக்குள்ள உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்ட அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்க போவதில்லை.

    ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப்பாதையில் வளர்த்தெடுப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்.

    அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அந்த ஒளி, உதயசூரியனால் கிடைக்கும். ஜனநாயக வழியில் தமிழகத்தை மீட்போம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×