என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்6 Nov 2020 12:11 PM GMT (Updated: 6 Nov 2020 12:11 PM GMT)
தஞ்சையில் அரிவாளை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சரபோஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கல்லூரிக்கு சொந்த வேலையாக வந்துள்ளார். பின்னர் கல்லூரியை விட்டு வெளியே வந்த அவர் நுழைவு வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் வாரியை சேர்ந்த மாரியப்பன் (34) மற்றும் துவாரகா நகரை சேர்ந்த சேகர்(36) ஆகியோர் வந்தனர். அவர்கள் சரபோஜிடம் செல்போனை தாருங்கள் பேசிவிட்டு தருகிறோம் என்று கூறினர். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சரபோஜின் சட்டை பையில் இருந்து செல்போன் மற்றும் ரூ.200 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் சேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோல் சேவப்பநாயக்கன்வாரி நேரு நகரை சேர்ந்தவர் குகன் (32). சம்பவத்தன்று இவர் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக புதிய பஸ்நிலையம் அருகே ஒரு கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். காந்தி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது, பின்னால் இறங்கிய மர்ம நபர் ஒருவர் குகனின் சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்துள்ளார். இதனை பார்த்த குகன் அந்த நபரை பிடித்து தஞ்சை மேற்கு நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சையை அடுத்த வயலூர் பகுதியை பழனிவேல் மகன் கருணாகரண் (20) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சரபோஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கல்லூரிக்கு சொந்த வேலையாக வந்துள்ளார். பின்னர் கல்லூரியை விட்டு வெளியே வந்த அவர் நுழைவு வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மருத்துவக்கல்லூரி சாலை பொன்நகர் வாரியை சேர்ந்த மாரியப்பன் (34) மற்றும் துவாரகா நகரை சேர்ந்த சேகர்(36) ஆகியோர் வந்தனர். அவர்கள் சரபோஜிடம் செல்போனை தாருங்கள் பேசிவிட்டு தருகிறோம் என்று கூறினர். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சரபோஜின் சட்டை பையில் இருந்து செல்போன் மற்றும் ரூ.200 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் சேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோல் சேவப்பநாயக்கன்வாரி நேரு நகரை சேர்ந்தவர் குகன் (32). சம்பவத்தன்று இவர் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக புதிய பஸ்நிலையம் அருகே ஒரு கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். காந்தி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது, பின்னால் இறங்கிய மர்ம நபர் ஒருவர் குகனின் சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்துள்ளார். இதனை பார்த்த குகன் அந்த நபரை பிடித்து தஞ்சை மேற்கு நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சையை அடுத்த வயலூர் பகுதியை பழனிவேல் மகன் கருணாகரண் (20) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X