என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு
Byமாலை மலர்6 Nov 2020 11:16 AM GMT (Updated: 6 Nov 2020 11:22 AM GMT)
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு குறித்து அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதையடுத்து பல்வேறு தரப்பினர் நெருக்கடியால் கடந்த 30 ஆம் தேதி 7.5% உள் ஒதுக்கீடுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து நீலகிரி பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதையடுத்து பல்வேறு தரப்பினர் நெருக்கடியால் கடந்த 30 ஆம் தேதி 7.5% உள் ஒதுக்கீடுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து நீலகிரி பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X