என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் -நீதிமன்றத்தில் முறையீடு
Byமாலை மலர்5 Nov 2020 6:20 AM GMT (Updated: 5 Nov 2020 6:20 AM GMT)
அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் துவக்கி உள்ளது. விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் மாணவர்களையும் சேர்க்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த பிரீத்தி என்பவர் சார்பில் வழக்கறிஞர் இந்த முறையீட்டை முன்வைத்தார். ஆனால், இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என நிதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அறிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X