search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்

    பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    பெரியகுளம்:

    பெரியகுளம் துணை மின்நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான மேல்மங்கலம் தேவதானப்பட்டி, காமாட்சிபுரம், நல்லகருப்பண்பட்டி, சில்வார்பட்டி, தண்ணீர்பந்தல், அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, டி.வாடிப்பட்டி, கீழகாமக்காபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×