search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு- நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்

    பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

    முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன.

    இந்த நிலையில், பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
    Next Story
    ×