என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ உயர்வு
Byமாலை மலர்4 Nov 2020 4:06 AM GMT (Updated: 4 Nov 2020 4:06 AM GMT)
திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திசையன்விளை:
திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது வட மாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. முருங்கை வறட்சி பயிர். அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடகிழக்கு பருவமழை தாமதம் ஏற்பட்டுள்ளதால் இங்கு வெயில் அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் இந்த பகுதியில் பருவமழை பெய்யவில்லை. கடும் வெயில் அடிக்கிறது.
இதனால் திசையன்விளை முருங்கைக்காய் மொத்த விலை மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பருவ மழை மேலும் தாமதம் அடைந்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது வட மாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. முருங்கை வறட்சி பயிர். அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடகிழக்கு பருவமழை தாமதம் ஏற்பட்டுள்ளதால் இங்கு வெயில் அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் இந்த பகுதியில் பருவமழை பெய்யவில்லை. கடும் வெயில் அடிக்கிறது.
இதனால் திசையன்விளை முருங்கைக்காய் மொத்த விலை மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பருவ மழை மேலும் தாமதம் அடைந்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X