என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் ராணுவ வீரர் கைது
Byமாலை மலர்4 Nov 2020 1:58 AM GMT
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். பின்னர், அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோரும், பாலகிருஷ்ணனின் பெற்றோரும் திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்தனர். கடந்த 30-ந்தேதி சிறுமியை பாலகிருஷ்ணன் திருமணம் செய்தார்.
திருமணம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பாலகிருஷ்ணன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த இளம்வயது திருமணம் செய்த தகவல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு கிடைத்தது. குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அவருக்கு இளம்வயது திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலகிருஷ்ணனின் தந்தை கருப்பன், தாய் வெள்ளையம்மாள் மற்றும் சிறுமியின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். பின்னர், அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோரும், பாலகிருஷ்ணனின் பெற்றோரும் திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்தனர். கடந்த 30-ந்தேதி சிறுமியை பாலகிருஷ்ணன் திருமணம் செய்தார்.
திருமணம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பாலகிருஷ்ணன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த இளம்வயது திருமணம் செய்த தகவல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு கிடைத்தது. குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அவருக்கு இளம்வயது திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலகிருஷ்ணனின் தந்தை கருப்பன், தாய் வெள்ளையம்மாள் மற்றும் சிறுமியின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X