என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்3 Nov 2020 1:35 PM GMT (Updated: 3 Nov 2020 1:35 PM GMT)
முசிறி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
முசிறி:
முசிறி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளில் விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முசிறி அருகே பொன்னாங்கன்னிபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்து, அவற்றைபறிமுதல் செய்து முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி வழக்குப்பதிந்து பொன்னாங்கன்னி பட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது 32), மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குழந்தைவேல்(45) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளில் விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முசிறி அருகே பொன்னாங்கன்னிபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்து, அவற்றைபறிமுதல் செய்து முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி வழக்குப்பதிந்து பொன்னாங்கன்னி பட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது 32), மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குழந்தைவேல்(45) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X