என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணகுடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் மகளை கத்தியால் குத்திய தந்தை
Byமாலை மலர்3 Nov 2020 7:11 AM GMT (Updated: 3 Nov 2020 7:11 AM GMT)
பணகுடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் மகளை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). கூலித்தொழிலாளி.
இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தினசரி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இது இவரது மகள் நந்தினி க்கு (20) பிடிக்கவில்லை. இதனால் அவர் மதுகுடிக்க கூடாது என்று தந்தையை கண்டித்துள்ளார். இந்தநிலையில் நேற்றும் சுரேஷ் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நந்தினி தந்தையை திட்டினார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் நந்தினியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அலறினார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வரவும் சுரேஷ் தப்பியோடி விட்டார்.
பலத்த காயம் அடைந்த நந்தினிக்கு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேசை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X