search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நன்னிலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை

    நன்னிலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நன்னிலம்:

    நன்னிலம் அருகே உள்ள புத்தகளூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஹேமா(வயது17). இவர் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ணன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஹேமா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். 

    இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×