என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மைத்துனர் அடித்துக்கொலை
Byமாலை மலர்2 Nov 2020 8:46 AM GMT (Updated: 2 Nov 2020 2:30 PM GMT)
திருமங்கலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
திருமங்கலம்:
திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்(வயது 49). விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆதிலட்சுமியின் பெரியப்பா மகன் தங்கப்பாண்டி(45). இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை 6 மணி அளவில் தங்கப்பாண்டி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது இவருடைய மைத்துனர் ஜெயராம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி அருகில் கிடந்த உருட்டு கட்டையால் ஜெயராமை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகராறின்போது தங்கப்பாண்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X