search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூரில் மேலும் 91 பேருக்கு தொற்று : கொரோனாவுக்கு 3 பேர் பலி

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியாகியுள்ளனர். 121 பேர் குணமடைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 100 என்ற அளவில் இருந்து வருகிறது. நேற்று 91 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 569 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது 982 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் 3 பேர் இறந்துள்ளனர்.

    திருப்பூரை சேர்ந்த 61 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுபோல் 48 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    76 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×