search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
    X
    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

    கந்தம்பாளையம் அருகே கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

    கந்தம்பாளையம் அருகே திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    கந்தம்பாளையம்:

    கந்தம்பாளையம் அருகே உள்ள செருக்கலை ஊராட்சிக்குட்பட்ட எஸ்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் விஜய கண்ணன் (வயது 29). ரிக் வண்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் இலுப்புலி மாரப்பம்பாளையத்தில் உள்ளதால் விஜய கண்ணன் அடிக்கடி உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த சங்கரன் மகள் சவுபர்ணிகாவுக்கும் (19) விஜய கண்ணணுக்கும் இடையே காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. சவுபர்ணிகா எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார். 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 

    இதையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடியினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

    இதுகுறித்து இருவீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேசி சமாதானம் செய்த போலீசார் காதல் கணவருடன் கல்லூரி மாணவியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×