என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 Nov 2020 9:45 AM GMT (Updated: 1 Nov 2020 9:45 AM GMT)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலப்பாளையம் பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் அரசு.பிரபாகரன், ஊடக மைய நிர்வாகி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு அவதூறு பரப்புவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயக்குமார், செல்வராஜ், சங்கரன், தங்கபாண்டியன், மணி, அரவிந்த், செல்வன், பாலசுப்பிரமணியன், இசை செல்வம், முகிலன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X