search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கரூர் அருகே மரத்தில் ஏறி தேன் எடுக்க முயன்ற டிரைவர் தவறி விழுந்து பலி

    கரூர் அருகே மரத்தில் ஏறி தேன் எடுக்க முயன்ற டிரைவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள நன்னியூர்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39). கார் டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நன்னியூர் செவ்வந்திபாளையம் சாலையில் உள்ள புளியமரத்தில் ஏறி தேன் எடுப்பதற்கு முயன்றார். அப்போது மரத்தில் இருந்து சுதாகர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×