என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் அருகே வீரனார்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்1 Nov 2020 6:47 AM GMT (Updated: 1 Nov 2020 6:47 AM GMT)
நீடாமங்கலம் அருகே வீரனார்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி கீழத்தெருவில் வீரனார்கோவில் உள்ளது. இக்கோவிலை கீழத்தெரு கிராம மக்கள் சீரமைத்து ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருவது வழக்கம். தற்போது கொரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு வீரனார் கோவிலில் திருவிழா நடைபெறவில்லை. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவதும் வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி இரவு மர்மநபர்கள் கோவில் கிரில் கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X