என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மின் வாரிய அதிகாரி பலி
Byமாலை மலர்1 Nov 2020 6:31 AM GMT (Updated: 1 Nov 2020 6:31 AM GMT)
பொங்கலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின் வாரிய அதிகாரி பலியானார்.
பொங்கலூர்:
பொங்கலூர் நாராயணநாயக்கன்புதூர் அருகே உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் சிவன்மலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை காங்கேயத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவினாசிபாளையம், சுங்கம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியின் பின்பகுதியில் ராஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார்.
இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அவினாசிபாளையம் போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொங்கலூர் நாராயணநாயக்கன்புதூர் அருகே உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் சிவன்மலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை காங்கேயத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவினாசிபாளையம், சுங்கம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியின் பின்பகுதியில் ராஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார்.
இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அவினாசிபாளையம் போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X