என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்31 Oct 2020 11:08 AM GMT (Updated: 31 Oct 2020 11:08 AM GMT)
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் சொக்கட்டான்தோப்பு பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் கண்ணதாசன் (வயது 32). இவருடைய மனைவி லட்சுமி. இவர் மேலப்பாளையம் சிவராஜபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் மனைவியை கொண்டுபோய் விட்டு விட்டு, டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். தெற்கு புறவழிச்சாலை குறிச்சி பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலைஓரத்தில் கவிழ்ந்தது. இதில் கண்ணதாசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, அங்குள்ள வாய்க்காலுக்குள் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X