search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி

    தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 35). நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி அருகில் இருந்த வீட்டில் தண்ணீர் பிடித்தாராம். 

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, அந்த வீட்டின் சுவற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின்கம்பம் வழியாக சுவரில் மின்சாரம் கசிந்து உள்ளது. இதனால் சுவர் முழுவதும் மின்சாரம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தனலட்சுமி ஈரமான கைகளால் காம்பவுண்டு சுவரை தொட்டு உள்ளார். இதனால் தனலட்சுமியை மின்சாரம் தாக்கியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×