என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்31 Oct 2020 9:03 AM GMT (Updated: 31 Oct 2020 9:03 AM GMT)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 35). நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி அருகில் இருந்த வீட்டில் தண்ணீர் பிடித்தாராம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, அந்த வீட்டின் சுவற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின்கம்பம் வழியாக சுவரில் மின்சாரம் கசிந்து உள்ளது. இதனால் சுவர் முழுவதும் மின்சாரம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தனலட்சுமி ஈரமான கைகளால் காம்பவுண்டு சுவரை தொட்டு உள்ளார். இதனால் தனலட்சுமியை மின்சாரம் தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X