search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேனியில் துணிகர சம்பவம்: பஞ்சாலை அதிபர் வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

    தேனியில் பஞ்சாலை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் ¾ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    தேனி:

    தேனி என்.ஆர்.டி. நகரில் வசிப்பவர் சீனிவாசராகவன் (வயது 58). இவர், கோவையில் பஞ்சாலை நடத்தி வருகிறார். மேலும் சின்னமனூர் அருகே புலிக்குத்தி பகுதியில் கற்றாழை சாறு உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ளார். இந்தநிலையில் கோவையில் வசிக்கிற அவருடைய அண்ணனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சீனிவாசராகவன் கோவைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் சீனிவாசராகவன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறைகளையும் திறந்து அங்கிருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ¾ கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர்.

    நேற்று காலை, சீனிவாசராகவனின் வீட்டை சுத்தம் செய்ய வேலையாட்கள் வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சீனிவாசராகவன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவில் பூட்டை உடைத்து, நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி கொண்டு பின்வாசல் கதவை உடைத்து வெளியேறி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர் கள் அங்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் சீனிவாசராகவன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.மேலும் சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, திருடர் களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×