என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை
Byமாலை மலர்31 Oct 2020 8:13 AM GMT (Updated: 31 Oct 2020 8:13 AM GMT)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கடந்த 13-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசம் அடைந்துள்ளதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கடந்த 13-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசம் அடைந்துள்ளதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X