
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் என்கிற பாபு. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் அபிஷேக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல்நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.