search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 24). விவசாய தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ராஜ்கிரண் தந்தை நாகராஜன் (52) கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்கிரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×