என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்30 Oct 2020 9:06 PM GMT (Updated: 30 Oct 2020 9:06 PM GMT)
திருமணம் தடைபட்டு வந்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க. நகர்:
சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் யாமினி (வயது 25). பி.காம் பட்டதாரியான இவர், அண்ணாசாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
தந்தை இறந்த நிலையில் தனது தாய் தாட்சாயிணியுடன் சொந்த வீட்டில் 2-வது மாடியில் வசித்து வந்தார். யாமினிக்கு கடந்த சில வருடங்களாக அவரது தாய், மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனால் எந்த வரனும் சரியாக அமையாமல் திருமணம் தடைபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் யாமினியிடம் அவரது தாய் தாட்சாயிணி மீண்டும் திருமணம் பற்றி பேசினார். திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்த நிலையில் மீண்டும் அதைபற்றி தாய் பேசுவதால் விரக்தி அடைந்த யாமினி, திடீரென 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த யாமினி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தலைமை செயலக காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X