என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே வேனில் 77 ரேஷன் அரிசி மூடைகள் கடத்தல் - 3 பேர் கைது
Byமாலை மலர்30 Oct 2020 2:22 PM GMT (Updated: 30 Oct 2020 2:22 PM GMT)
திருமங்கலம் அருகே வேனில் 77 ரேஷன் அரிசி மூடைகள் கடத்திய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வேனில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தி வருவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் கண்டுகுளம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அப்போது வேனில் 77 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து வேன் டிரைவர் மதுரை கீரைதுறையை சேர்ந்த சைவதுறையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசி போத்தம்பட்டியில் இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் தொடர்புடைய கீரைத்துறையைச் சேர்ந்த முனியசாமி (வயது 22), ரவிச்சந்திரன் (26) மற்றும் சைவதுறை ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
வேன் மற்றும் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X