என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்30 Oct 2020 11:22 AM GMT (Updated: 30 Oct 2020 11:22 AM GMT)
மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:
குடவாசல் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கணேசனை கடந்த 8-ந் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த கொலை வழக்கில் கடந்த 27-ந் தேதி மணவாளநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த மோகன் மகன் வாஞ்சிநாதன் (வயது 20) என்பவரை விளமல் பாலத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் ராதாகிருஷ்ணன் (36) என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீஸ் பாதுகாப்புடன் எரவாஞ்சேரி போலீஸ்நிலையம் அழைத்து வந்து கைது செய்தனர். இந்த வழக்கில் மணவாளநல்லூர் ஜெயராமன் மகன் விஜய் (26) என்பவரை நேற்று மயிலாடுதுறையில் எரவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மகேஷ் என்கிற மகேந்திரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X