என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்30 Oct 2020 11:08 AM GMT (Updated: 30 Oct 2020 11:08 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பச்சூரில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் குண்டுகொல்லி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலையில் பச்சூரில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X